Sunday, July 15, 2012

வீசும் வெளிச்சத்திலே... படம்: நான் ஈ பாடலாசிரியார்: கார்கி இசை: மரகதமணி பாடியவர்: கார்த்திக் , சாஹிதி

வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே

கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ..

கொஞ்சம் உளறிக் கொட்டவா?... படம்: நான் ஈ இசை: மரகதமணி பாடியவர்: விஜய் பிரகாஷ்

கொஞ்சம் உளறிக் கொட்டவா?
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா?
கொஞ்சம் வாயை மூடவா?
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?

கொஞ்சம் வழியை கேட்டேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் வலிகள் தருகிறாய்

நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.
நீ திரைகள் மாட்டினால்
உள் அறைகள் பூட்டினால்
உன் இதயமூலையில்
நானே இருப்பேன்.

கொஞ்சம் உள்ளம் சிந்திடு
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு
கொஞ்சம் பார்வை வீசிடு
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு

கொஞ்சம் திறக்கச் சொன்னேன் - அடி
கொஞ்சம் கொஞ்சம் மறைக்கப் பார்க்கிறாய்

ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை
ஏ கஞ்ச வஞ்சியே
உன் நெஞ்சில் ஏன் தடை?
இப்போலி வேலியை
இன்றாவது உடை

காக்கை தூது அனுப்பிடு
காற்றாய் வந்துன் கூந்தல் கோதுவேன்
ரெக்கை ஏதும் இன்றியும்
தூக்கிக்கொண்டு விண்ணில் ஏறுவேன்

இன்னும் ஜென்மம் கொண்டால் - உன்
கண்முன் தோன்றி இம்சை பண்ணுவேன்

என் இதயக் கூட்டிலே
உன் இதயம் கோர்க்க வா!
ஈருயிரை சேர்க்க வா!
ஒன்றாகிட வா!

நெஞ்சிலே லாவா... படம்: நான் ஈ பாடலாசிரியார்: மதன் கார்கி இசை: மரகதமணி பாடியவர்: ஆச்சு , ஷிவானி

லாவா லாவா லாவா
நெஞ்சிலே லாவா
எரிமலைப் பெண்ணே
இன்னும் அருகில் வா!

ஆங்காங்கே பார்வை மேய
எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா?
ஓ.. வதைத்தாயா?

உன் துளி அழகில்
நான் தொலைந்தேன்
உன் முழு அழகில்
நான் அழிவேன்

ஆனாலும் ஆனாலும்
உன்னை அடைந்திடுவேன்.

படம்: நான் ஈ பாடலாசிரியார்: கார்கி இசை: மரகதமணி பாடியவர்: ஆச்சு , ஷிவானி

நானி என் பேரு
நான் குட்டி ஈ தான் பாரு
அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு
உன் கோட்டைக்குள்ள வாறேன்
உனை வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்கப் போறேன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா!
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!

பொறி என்ன செய்யும்,
காட்டுக்குள்ள விட்டா?
ஒட்டுமொத்தம் சுட்டெரிச்சு
சாம்பலாக்கிடாதா?
துளி என்ன செய்யும்,
தொண்டைக்குள்ள விட்டா?
மண்டைக்குள்ள நஞ்ச ஏத்தி
உன்னை சாய்ச்சிடாதா?

இந்த அண்டம் கூட தொடங்கும் முன்ன வண்டின் அளவுதான்
ஈன்னு என்ன பாத்தான்
என்ன பூச்சியில சேத்தான்
அங்க தான அவன் தோத்தான்
நான் மூச்சுக்குள்ள நச்சு பாய்ச்ச வந்திருக்கும் சாத்தான்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா

நான் உடனடியா செஞ்சு முடிக்க
பத்து விஷயம் கிடக்குது
todo... todo... todo todo...
one உன்ன கொல்லணும்
two உன்ன கொல்லணும்
three உன்ன கொல்லணும்
four உன்ன கொல்லணும்
five உன்ன கொல்லணும்
six உன்ன கொல்லணும்
seven உன்ன கொல்லணும்
eight உன்ன கொல்லணும்
nine உன்ன கொல்லணும்
ten உன்ன கதற கதற கதற கதற
பதற பதற பதற பதற
சிதற சிதற வெட்டி வெட்டி கொல்லணும்

ரெக்க ரெக்க ரெக்க
ரெக்க ரெண்டின் ராகம் கேக்குதா?
உன் செவியோரம் மரண ஓலம்
எட்டிப் பாக்குதா?
ஈயோட காலு கூட
ஈட்டி போல மாறும்
உன கொன்னு தீத்த பின்ன தான்
என் கொலவெறியும் தீரும்

செத்துப் பொழச்சு எமன பாத்து
சிரிச்சவன் நானி!
நெய்யு மேல மொய்க்க
ஈயா நானு? இல்ல
உன் நெஞ்சில் முள்ள தைக்க
பேயா வந்த தொல்ல
உன் எல்லைக்குள்ள உன்ன கொல்ல அவதரிச்ச வில்லன்

ஈ டா ஈ டா ஈ டா!
கண்ணு ரெண்டில் தீடா
நரகம் உந்தன் வீடா
மாத்திடுவேன் வா டா!...

Thursday, July 5, 2012

கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே(Thenmerku Paruvakaatru2010)

கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருசே
கைக்கு கெடச்சா பழம் அட வாய்வைக்க வந்து சேருமா
முழுசா கெடச்சிருமா
இல்ல உன் வாயில் முல்லுதைக்குமா
உடல் வெட்டிக்கிட்டு  மெல்ல வெலகுதே
உசூர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே
இது நல்லதுக்க  இல்ல கெட்டதுக்கா
நெஞ்சி போகும் வழி போனா பொழப்பிருக்கா
 கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு.................................

கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருசே
கைக்கு கெடச்சா பழம் அட வாய்வைக்க வந்து சேருமா
முழுசா கெடச்சிருமா
இல்ல உன் வாயில் முல்லுதைக்குமா
உடல் வெட்டிக்கிட்டு  மெல்ல வெலகுதே
உசூர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே
இது நல்லதுக்க  இல்ல கெட்டதுக்கா
நெஞ்சி போகும் வழி போனா பொழப்பிருக்கா
 கள்ளி கள்ளிச்செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே
காட்டு கரட்டே ஒன்னு.................................

நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி உண்டு (Thenmerku Paruvakaatru2010)

நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி உண்டு
நாலுக்கும் ரெண்டுக்கும் இடைவெளி ரெண்டு
காதுல கேட்டதில் பொய்களும் உண்டு
கொளம் வத்திபோனதும் வெளிவரும் நண்டு

கருவேலம் மரத்துக்கு முள்ளே  சொந்தமில்ல
கருவேலம் பட்டையும் பிசினும் இருக்குதுள்ளே
எப்போவும் கெட்டது பூமியில் எதுவுமில்லே
உண்மையக்கண்டதும் வலிக்குது உசுருக்குள்ளே

நன்மைக்கும் தீமைக்கும் இடைவெளி உண்டு
நாலுக்கும் ரெண்டுக்கும் இடைவெளி ரெண்டு
காதுல கேட்டதில் பொய்களும் உண்டு
கொளம் வத்திபோனதும் வெளிவரும் நண்டு 

Wednesday, July 4, 2012

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா(Thenmerku Paruvakaatru2010)

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
நெஞ்சி நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போடா துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளக்கட்டி அடிக்கிற கன்ன
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா


பெண்:
ஆ.........அத்தமவன் போல வந்து
அங்கே இங்கே மேய்வ
அத்துவானம் காட்டில் விட்டு
அத்து கிட்டு போவ
ஆண்:
முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சி குழி நோக
முட்டை இட்ட காடை எங்க காட்டை  விட்டு போக
பெண்:
கிடையாட்டு கோமியம் கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிருக்கேத்தும் ஆம்பள சொல்லு
மருநாலே மாறிவிடும்
ஆண்:
நான் பொம்பள கிருக்குல வல்ல
என் புத்தியில் வேறொன்னும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லும் மாறுவதில்ல
பெண்:
நீ வெறும் வாய மெல்லாத வெலைய்யாட்டிள்ள
ஆண்:
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
பெண்:
லே லே லே லே லே லே லே லே லே லே லே லே
ஆண்:
ஆண்டிப்பட்டி தாலுக்காவில்
பொம்பளைக்கா  பஞ்சம்
ஆகமொத்தம் ஒன்ன கண்டு
ஆடி போச்சி நெஞ்சம்
பெண்:
பித்தம் கொஞ்சம் கூடி போனா
இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுகூட்ட
சாத்தி வையி கொஞ்சம்
ஆண்:


கொடியோடும் சக்கரைவள்ளி
தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி
அறியாம மனச வைக்கும்
பெண்:
நீ பட்டுன்னு முன்னே வந்து நில்லு
யான் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்ய முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல  பல்லு
ஆண்:
நான் முடி போடா ரெடி தாண்டி
முடிவா சொல்லு...........................


ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
நெஞ்சி நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போடா துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளக்கட்டி அடிக்கிற கன்ன
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா