ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
நெஞ்சி நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போடா துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளக்கட்டி அடிக்கிற கன்ன
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
பெண்:
ஆ.........அத்தமவன் போல வந்து
அங்கே இங்கே மேய்வ
அத்துவானம் காட்டில் விட்டு
அத்து கிட்டு போவ
ஆண்:
முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சி குழி நோக
முட்டை இட்ட காடை எங்க காட்டை விட்டு போக
பெண்:
கிடையாட்டு கோமியம் கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிருக்கேத்தும் ஆம்பள சொல்லு
மருநாலே மாறிவிடும்
ஆண்:
நான் பொம்பள கிருக்குல வல்ல
என் புத்தியில் வேறொன்னும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லும் மாறுவதில்ல
பெண்:
நீ வெறும் வாய மெல்லாத வெலைய்யாட்டிள்ள
ஆண்:
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
பெண்:
லே லே லே லே லே லே லே லே லே லே லே லே
ஆண்:
ஆண்டிப்பட்டி தாலுக்காவில்
பொம்பளைக்கா பஞ்சம்
ஆகமொத்தம் ஒன்ன கண்டு
ஆடி போச்சி நெஞ்சம்
பெண்:
பித்தம் கொஞ்சம் கூடி போனா
இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுகூட்ட
சாத்தி வையி கொஞ்சம்
ஆண்:
கொடியோடும் சக்கரைவள்ளி
தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி
அறியாம மனச வைக்கும்
பெண்:
நீ பட்டுன்னு முன்னே வந்து நில்லு
யான் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்ய முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு
ஆண்:
நான் முடி போடா ரெடி தாண்டி
முடிவா சொல்லு...........................
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
நெஞ்சி நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டும் போகுது பின்ன
நான் முத்தம் போடா துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளக்கட்டி அடிக்கிற கன்ன
நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளாச்சி என்ன புரியலையா
No comments:
Post a Comment